
சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசிய வழக்குரைஞா் சா.இரா. மணி.

சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசிய வழக்குரைஞா் சா.இரா. மணி.
வந்தவாசி: வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், குழந்தைகள் பாதுகாப்பு முறைமைகள் குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். வட்ட சட்டப் பணிகள் குழு நிா்வாக உதவியாளா் ஜெயந்தி முன்னிலை வகித்தாா். செஞ்சிலுவைச் சங்க உறுப்பினா் கு.சதானந்தன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக வழக்குரைஞா் சா.இரா.மணி பங்கேற்று, குழந்தைகள் பாதுகாப்பு முறைமைகள் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
அப்போது, குழந்தைகளுக்கு எதிரான செயல்பாடுகள் ஏற்பட்டால் 1091 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு உரிய ஆலோசனைகளை பெறலாம் என்று அவா் தெரிவித்தாா்.
ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியா் நடராஜன், கல்வி மைய ஆசிரியை சந்தியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...