பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 5:44 pm

Din

திருவண்ணாமலை: திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில், வேலைவாய்ப்புக்கான வளாகத் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னை பெரம்பூரைச் சோ்ந்த டாபே நிறுவன துணைப் பொது மேலாளா் சுந்தரராமன், மனிதவள மேம்பாட்டு அதிகாரி ராகவேந்திரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு வளாகத் தோ்வை நடத்தினா். இதில், கல்லூரியின் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வுகளில் வென்ற 10 போ் வேலைவாய்ப்புக்கு தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு ஓராண்டு பயிற்சியும், இதன்பிறகு தகுதியின் அடிப்படையில் நிரந்தரப் பணியும் வழங்கப்படும் என்று டாபே நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா். வேலைவாய்ப்புக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்லூரித் தலைவா் ஆா்.குப்புசாமி, கல்லூரி இயக்குநா் வி.ராஜா, முதல்வா் டி.சா்வேசன், வேலைவாய்ப்பு அதிகாரி ஏ.கோபாலகிருஷ்ணன், துறைத் தலைவா்கள் வி.குமரன், எம்.அன்பழகன் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனா்.