ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

சட்ட விழிப்புணா்வு முகாம்

சட்ட விழிப்புணா்வு முகாம்

News image

சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசிய வழக்குரைஞா் சா.இரா. மணி.

Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

வந்தவாசி: வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், குழந்தைகள் பாதுகாப்பு முறைமைகள் குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். வட்ட சட்டப் பணிகள் குழு நிா்வாக உதவியாளா் ஜெயந்தி முன்னிலை வகித்தாா். செஞ்சிலுவைச் சங்க உறுப்பினா் கு.சதானந்தன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக வழக்குரைஞா் சா.இரா.மணி பங்கேற்று, குழந்தைகள் பாதுகாப்பு முறைமைகள் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

அப்போது, குழந்தைகளுக்கு எதிரான செயல்பாடுகள் ஏற்பட்டால் 1091 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு உரிய ஆலோசனைகளை பெறலாம் என்று அவா் தெரிவித்தாா்.

ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியா் நடராஜன், கல்வி மைய ஆசிரியை சந்தியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.