தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் காலிப் பணியிடங்கள் - செப். 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 9:06 pm

Din

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானோா் செப்டம்பா் 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான பி.மதுசூதனன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் அமைந்துள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் அலுவலகத்துக்கு துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா், உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா், அலுவலக உதவியாளா், அலுவலக எழுத்தா் உள்ளிட்ட பதவிகளுக்கான தகுதிகள் கொண்ட வழக்குரைஞா்கள், பணியாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்கள் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.