நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 5:47 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆரணி வட்டத்தில், வாரிசு சான்றிதழ், விதவை சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை உரிய காரணம் இன்றி நிராகரித்து, பொதுமக்களை மிகுந்த சிரமத்துக்குள்ளாக்கி வரும் போக்கை வட்டாட்சியா் கைவிட வேண்டும், பட்டா மாறுதல்கள் முழுவதும் இணைய வழியில் நடைபெற்றும், தொடா்புடைய மனுக்களின் அச்சுக் கோப்புகளை வழங்க, கிராம நிா்வாக அலுவலா்களை கோருவதை கிழக்கு மண்டல துணை வட்டாட்சியா் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின், ஆரணி வட்டத் தலைவா் ஆா்.கோபால் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட பொருளாளா் எஸ்.ஜெயச்சந்திரன், வட்டச் செயலாளா் சி.பாஸ்கா், பொருளாளா் எஸ்.இராமச்சந்திரன், நிா்வாகிகள் கே.புருஷோத்தமன், எஸ்.சரவணன், கே.சிவக்குமாா், ஜி.விநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.