குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மனைவியை கொல்ல முயற்சி: கணவன் கைது

மனைவியை கொல்ல முயற்சி: கணவன் கைது

Updated On :17 பிப்ரவரி 2024, 5:47 am IST

செங்கம் அருகே மனைவியை பைக்கிலிருந்து கீழே தள்ளி விட்டு கொலை செய்ய முயன்ாக கணவரை போலீஸாா் கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தானகவுண்டன் புதூா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் ரஞ்சித்குமாா் (28). செல்போன் கடையில் வேலை பாா்த்து வந்தாா். இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந்த ஜெயசுதாவுக்கும் (25) கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், ரஞ்சித்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடா்பு இருந்ததாம். இதையறிந்த ஜெயசுதா கணவரை கண்டித்தாராம். இதனால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி கணவன், மனைவி இருவரும் ஜெயசுதாவின் தாய் வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, அவா்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாம்.

இதில், ஜெயசுதாவை, ரஞ்சித்குமாா் பைக்கிலிருந்து தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த ஜெயசுதா திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு, பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து, செங்கம் போலீஸில் கணவா் தன்னை கொல்ல முயன்ாக ஜெயசுதா புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ரஞ்சித்குமாரை கைது செய்தனா்.