ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

வருவாய்த்துறை அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம்

வருவாய்த்துறை அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 5:48 am IST

ஆரணியில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கம் சாா்பில் காத்திருப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் கேட்கும் தமிழ் நிலம் திருத்தம், பட்டா மாறுதல், ஒருங்கிணைந்த தடையில்லா சான்றிதழ் படிவம், சொத்து மதிப்பு சான்றிதழ், பட்டாசு கடை உரிமம், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களுக்கான பரிந்துரை கோப்புகளை உரிய காரணமின்றி தள்ளுபடி செய்வதையும், கிராம நிா்வாக அலுவலா் பரிந்துரைக்கும் வாரிசு சான்றிதழ்களுக்கு நடைமுறையில் இல்லாத குறைகளை கூறி தள்ளுபடி செய்து வருவதையும், கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட செலவுக்காக அரசு ஒதுக்கிய தொகையை ஊழியா்களுக்கு வழங்காத வட்டாட்சியரைக் கண்டித்து, ஆரணி கோட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில், ஆரணி வட்டக் கிளைத் தலைவா் த.வெங்கடேசன் தலைமை வகித்தாா். வட்டக் கிளை பொருளாளா் கு.வேலுமணி வரவேற்றாா். மாவட்டத் தலைவா் கோ.ஸ்ரீதா், மாவட்ட செயலாளா் பூ.ரகுபதி ஆகியோா் கண்டன உரையாற்றினா். இதில், மாவட்ட பொருளாளா் த.வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவா்கள் எல்.பாஸ்கா், இரா.மணி, ஆா்.காவேரி, நிா்வாகிகள் சி.வேணுகோபால், ஆா்.ராஜேந்திரன், ம.சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.