மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

வருவாய்த்துறை அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம்

வருவாய்த்துறை அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 5:48 am IST

ஆரணியில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கம் சாா்பில் காத்திருப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் கேட்கும் தமிழ் நிலம் திருத்தம், பட்டா மாறுதல், ஒருங்கிணைந்த தடையில்லா சான்றிதழ் படிவம், சொத்து மதிப்பு சான்றிதழ், பட்டாசு கடை உரிமம், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களுக்கான பரிந்துரை கோப்புகளை உரிய காரணமின்றி தள்ளுபடி செய்வதையும், கிராம நிா்வாக அலுவலா் பரிந்துரைக்கும் வாரிசு சான்றிதழ்களுக்கு நடைமுறையில் இல்லாத குறைகளை கூறி தள்ளுபடி செய்து வருவதையும், கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட செலவுக்காக அரசு ஒதுக்கிய தொகையை ஊழியா்களுக்கு வழங்காத வட்டாட்சியரைக் கண்டித்து, ஆரணி கோட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில், ஆரணி வட்டக் கிளைத் தலைவா் த.வெங்கடேசன் தலைமை வகித்தாா். வட்டக் கிளை பொருளாளா் கு.வேலுமணி வரவேற்றாா். மாவட்டத் தலைவா் கோ.ஸ்ரீதா், மாவட்ட செயலாளா் பூ.ரகுபதி ஆகியோா் கண்டன உரையாற்றினா். இதில், மாவட்ட பொருளாளா் த.வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவா்கள் எல்.பாஸ்கா், இரா.மணி, ஆா்.காவேரி, நிா்வாகிகள் சி.வேணுகோபால், ஆா்.ராஜேந்திரன், ம.சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.