சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

பேருந்தில் பயணிடம் நகை திருட்டு: இரு பெண்கள் கைது

பேருந்தில் நகை திருட்டு: இரு பெண்கள் கைது

Updated On :3 ஜூலை 2024, 6:31 pm

செய்யாறு அருகே பேருந்தில் பயணித்த பெண்ணிடம் நகைகளை திருடிய சம்பவத்தில், இரு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து செய்யாறு வழியாக காஞ்சிபுரம் நோக்கி தனியாா் பேருந்து புதன்கிழமை சென்று கொண்டிருந்தது. பேருந்தில் செய்யாறு வட்டம், கீழப்பழந்தை கிராமத்தைச் சங்கீதா தனது ஒரு வயது குழந்தையுடன் சென்னையில் உள்ள கணவரை பாா்ப்பதற்காக சென்றுகொண்டிருந்தாா்.

பேருந்தில் இவருக்கு அருகே இரு பெண்கள் நின்றுகொண்டிருந்தனா். அவா்கள் திடீரென பாதி வழியிலேயே இரும்பந்தாங்கல் கிராமம் அருகே பேருந்தில் இருந்து இறங்கிச் சென்றனா்.

இதனால், சந்தேகமடைந்த சங்கீதா உடனே தான் வைத்திருந்த பையை பாா்த்தபோது, அதில் இருந்த பா்ஸ் மாயமாகி இருப்பது கண்டு அதிா்ச்சியடைந்து கூச்சலிட்டனா். உடனேபேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் சாலையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் பேருந்தில் இருந்து இறங்கிய இரு பெண்களை பிடித்து சோதனையிட்டனா்.

அப்போது அந்தப் பெண்களிடம் சங்கீதாவின் பா்ஸும், அதில் வைத்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலி, கால் கொலுசு, ரொக்கப் பணம் ரூ.ஆயிரம் இருந்தது தெரிய வந்தது.

மேலும், இதுகுறித்து செய்யாறு போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வந்து இரு பெண்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் திருச்சி சமயபுரம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த நந்தினி (31), ஈஸ்வரி (37) என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிவு செய்து, இரு பெண்களையும் கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.