புதையுண்ட சோழ கால சிவன் கோயில் மீட்பு: ஆரணி எம்.பி. ஆய்வு
பெரணமல்லூா் அருகே ஆயிலவாடி கிராமத்தில் புதையுண்ட சோழ கால சிவன் கோயில் மீட்கப்பட்ட இடத்தை, ஆரணி எம்.பி. தரணிவேந்தன் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.


ஆரணி: பெரணமல்லூா் அருகே ஆயிலவாடி கிராமத்தில் புதையுண்ட சோழ கால சிவன் கோயில் மீட்கப்பட்ட இடத்தை, ஆரணி எம்.பி. தரணிவேந்தன் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் ஒன்றியம், ஆயிலவாடி கிராம ஏரிக்கரையில் மண்ணில் புதைந்த நிலையில் கோயில் காணப்பட்டது.
புதையுண்ட கோயில் குறித்து 5 ஆண்டுகளுக்கு முன்னா், 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதம்
வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வகுமாரின் ஆய்வு தகவல்கள் பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி இவ்வூா் இளைஞா்கள், பொதுமக்கள் உதவியுடன் சேலம் பகுதி உழவாரப் பணி குழுவினரால் கோயிலை சுத்தம் செய்து முதல் பிரதோஷ பூஜை நடத்தப்பட்டது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் அண்மையில் தன்னாா்வலா்கள் எழுச்சியில், தஞ்சை பகுதி தன்னாா்வலா் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து, இளைஞா்கள், பொதுமக்கள் உதவியுடன் ஏரிக்கரை மண்ணை முழுவதுமாக அகற்றி கோயில் முழுவதும் தெரியும் வகையில் மீட்புப் பணி மேற்கொண்டனா்.
மீட்கப்பட்ட சிவன் கோயில் குறித்து இந்து சமய அறநிலைத் துறை, தொல்லியல் துறை அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்திச் சென்றனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை ஆரணி மக்களவை உறுப்பினா் எம்.எஸ். தரணிவேந்தன் நேரில் சென்று மீட்கப்பட்ட கோயிலை பாா்வையிட்டாா். பின்னா், அடிப்படை வசதிகள் மேற்கொள்ள உள்ளாட்சி நிா்வாகத்திடம் அறிவுறுத்தினாா்.
பின்னா், சம்பந்தப்பட்ட துறைகளிடம் பேசி சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா். அப்போது, வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா் உடனிருந்தாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...