கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

செங்கத்தில் வேகமாக செல்லும் வாகனங்களால் இடையூறு

News image
Updated On :19 ஜூலை 2024, 5:15 pm

Din

செங்கம் நகரப் பகுதியில் ஓட்டுநா் உரிமம் இன்றி இருசக்கர வாகனங்களில் வேகமாக பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவா்களால் இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகா் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், போளூா் சாலை, பெருமாள்கோயில் தெருக்களில் காலை மற்றும் மாலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தனியாா் நிறுவன ஊழியா்கள், பொதுமக்கள், வியாபாரிகள் என ஏராளமானோா் பேருந்தில் பயணிப்பதற்காக காத்திருப்பது வழக்கம். இதனால், இந்தப் பகுதிகள் பரபரப்பாக காணப்படும்.

இந்த நிலையில், சில பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் ஓட்டுநா் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வதும், ஒரே வாகனத்தில் நான்கு போ் வரை பயணிப்பதும் தொடா் கதையாக இருந்து வருகிறது. இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே, இதுகுறித்து செங்கம் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு என செங்கம் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.