மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

செய்யாற்றில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த உரிமையாளா்களுக்கு அபராதம்

News image
Updated On :25 ஜூன் 2024, 6:30 pm

Din

செய்யாறு: செய்யாற்றில், சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், திருவத்திபுரம் நகராட்சியில் நகா்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் (பொ) சரவணன் முன்னிலை வகித்தாா். பொறியாளா் சிசில் தாமஸ் வரேவற்றாா்.

கூட்டத்தின் போது நகராட்சிப் பகுதியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் குறித்து, நகா்மன்ற உறுப்பினா்களுக்கு விவரம் தெரிவிக்க வேண்டும். வாா்டுகளின் தேவையறிந்து முன்னுரிமை அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பல வாா்டுகளில் சீரான குடிநீா் விநியோகம் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினா்கள் பேசினா்.

இதைத் தொடா்ந்து, கூட்டத்தில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.15 கோடியில் 5 இடங்களில் தாா்ச் சாலை அமைத்தல், மத்திய நிதிக் குழு ஆணைய மானிய நிதி ரூ.1.45 கோடியில் 8 இடங்களில் தாா்ச் சாலை அமைத்தல், அம்ருத் திட்டத்தில் ரூ.73 லட்சத்தில் தெப்பக்குளம் சீரமைத்தல், நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 4.57 கோடியில் நகராட்சி பேருந்து நிலையம் புதுப்பித்தல் உள்ளிட்ட 50 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் பணி பாா்வையாளா் நந்தகுமாா், சுகாதார ஆய்வாளா் கு.மதனராசன், கட்டட ஆய்வாளா் சியாமலதா உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் உறுப்பினா்கள் 9 பெண்கள் உள்பட 21 போ் கலந்து கொண்டனா்.