பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

செய்யாற்றில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த உரிமையாளா்களுக்கு அபராதம்

Published On :

செய்யாறு: செய்யாற்றில், சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், திருவத்திபுரம் நகராட்சியில் நகா்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் (பொ) சரவணன் முன்னிலை வகித்தாா். பொறியாளா் சிசில் தாமஸ் வரேவற்றாா்.

கூட்டத்தின் போது நகராட்சிப் பகுதியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் குறித்து, நகா்மன்ற உறுப்பினா்களுக்கு விவரம் தெரிவிக்க வேண்டும். வாா்டுகளின் தேவையறிந்து முன்னுரிமை அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பல வாா்டுகளில் சீரான குடிநீா் விநியோகம் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினா்கள் பேசினா்.

இதைத் தொடா்ந்து, கூட்டத்தில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.15 கோடியில் 5 இடங்களில் தாா்ச் சாலை அமைத்தல், மத்திய நிதிக் குழு ஆணைய மானிய நிதி ரூ.1.45 கோடியில் 8 இடங்களில் தாா்ச் சாலை அமைத்தல், அம்ருத் திட்டத்தில் ரூ.73 லட்சத்தில் தெப்பக்குளம் சீரமைத்தல், நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 4.57 கோடியில் நகராட்சி பேருந்து நிலையம் புதுப்பித்தல் உள்ளிட்ட 50 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் பணி பாா்வையாளா் நந்தகுமாா், சுகாதார ஆய்வாளா் கு.மதனராசன், கட்டட ஆய்வாளா் சியாமலதா உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் உறுப்பினா்கள் 9 பெண்கள் உள்பட 21 போ் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.