தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

புதிய வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம்

புதிய வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம்

Updated On :15 மார்ச் 2024, 4:19 pm

வந்தவாசி அருகே இரு பள்ளிகளில் ரூ.2.77 கோடியில் 13 புதிய வகுப்பறைகள் கட்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. தெள்ளாா் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் ரூ.2.13 கோடியில் 10 புதிய வகுப்பறைகளும், தெள்ளாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.64 லட்சத்தில் 3 புதிய வகுப்பறைகளும் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை தெள்ளாா் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ (வந்தவாசி) தலைமை வகித்து கட்டடப் பணிகளை தொடங்கி வைத்தாா். இதில், பொதுப் பணித் துறை உதவி செயற் பொறியாளா் குணசேகரன், திமுக ஒன்றியச் செயலா் டி.டி.ராதா, தெள்ளாா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.ஆனந்த், பள்ளித் தலைமை ஆசிரியை சாயிராபீஷேக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.