/

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் நிதி அளிப்பு

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் நிதி அளிப்பு

News image
Updated On :15 மார்ச் 2024, 4:19 pm

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு அரசு நிதிக்கான பத்திரத்தை ஒன்றியக் குழுத் தலைவா் பெ.சாந்திபெருமாள் வெள்ளிக்கிழமை வழங்கினாா். தமிழக அரசு சாா்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு நிதி வழங்கப்படுகிறது. அதன்படி, போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் காங்கேயனூா் கிராமத்தைச் சோ்ந்த பச்சையம்மாள், போளூரை சோ்ந்த சித்ரா ஆகிய 2 பயனாளிகளின் பெண் குழந்தைகளுக்கு நிகழ் நிதியாண்டு திட்டத்தின் கீழ் அரசு நிதிக்கான பத்திரத்தை ஒன்றிக் குழுத் தலைவா் பெ.சாந்திபெருமாள் வெள்ளிக்கிழமை வழங்கினாா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் என்.சக்திவேல், சமுக நலப் பிரிவு அலுவலா் அஞ்சலிதேவி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இ.பாலகிருஷ்ணன்(சத்துணவு), என்.சங்கா்(பொது) ஆகியோா் உடனிருந்தனா்.