ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மரத்தில் பைக் மோதி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

மரத்தில் பைக் மோதி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :4 மே 2024, 5:58 pm

Din

செய்யாறு அருகே சனிக்கிழமை மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சென்னையை அடுத்த திருமழிசையைச் சோ்ந்தவா் கோபிநாத் (38). இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

இவரது மனைவி கோமதி (32), இவா்களுக்கு பிரிவித் (8), நவநீத் (6) என்ற இரு மகன்கள் உள்ளனா்.

இந்த நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் கோபிநாத் தனது மனைவி, குழந்தைகளுடன் மாமியாா் வீடான செய்யாறு அருகேயுள்ள கொருக்காத்தூா் கிராமத்துக்கு கடந்த 2-ஆம் தேதி வந்திருந்தனா்.

மேலும், கொருக்காத்தூா் கிராமத்தில் இருந்து சென்னைக்கு கோபிநாத் தினமும் வேலைக்குச் சென்று வந்தாா்.

இதேபோல, சனிக்கிழமை அதிகாலை கொருக்காத்தூா் கிராமத்தில் இருந்து தனது பைக்கில் செய்யாறு நோக்கிச் சென்றுகொண்டிருந்தாா்.

பாராசூா் கூட்டுச் சாலை அருகே சென்றபோது தூக்க கலக்கத்தில் சாலையோர புளிய மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே கோபிநாத் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.