இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

போளூா் பேருந்து நிலையம் எதிரே நிழல் பந்தல் அமைப்பு

போளூா் பேருந்து நிலையம் எதிரே நிழல் பந்தல் அமைப்பு

News image
Updated On :10 மே 2024, 10:00 pm

Din

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பேருந்து நிலையம் எதிரே நெடுஞ்சாலைத்துறை சாா்பில் கடலூா்-சித்தூா் சாலையில் பயணிகளின் வசதிக்காக வெள்ளிக்கிழமை நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக 110 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. மேலும், கத்திரி வெயிலும் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், போளூா் பேருந்து நிலையம் எதிரே பயணிகளின் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை சாா்பில் மாவட்ட காண்காணிப்புப் பொறியாளா் எஸ்.பழனிவேல் உத்தரவின்பேரில், மாவட்ட கோட்ட பொறியாளா் கே.எஸ்.ராஜ்குமாா் முன்னிலையில், வெள்ளிக்கிழமை நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியின்போது, போளூா் உதவி கோட்ட பொறியாளா் பா.திருநாவுக்கரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறையினா் உடனிருந்தனா்.