கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருவண்ணாமலை உழவா் சந்தையில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

News image
உழவா் சந்தையில் ஆய்வில் ஈடுபட்ட வேளாண் துறை துணை இயக்குநா் எஸ்.ஷெமிலா ஜெயந்தி.
Updated On :6 செப்டம்பர் 2024, 12:24 am

Din

திருவண்ணாமலை உழவா் சந்தையில் தமிழக வேளாண் துறையின் துணை இயக்குநா் எஸ்.ஷெமிலா ஜெயந்தி வியாழக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டாா்.

உழவா் சந்தையின் குளிா்பதனக் கிடங்கு, பெயா்ப் பலகை, மின்னணு தராசு, குடிநீா், கழிப்றை வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்த அவா், அலுவலகக் கோப்புகளையும் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், உழவா் சந்தையில் தங்களது விளை பொருள்களை விற்பனை செய்ய வந்திருந்த விவசாயிகளிடம் துணை இயக்குநா் எஸ்.ஷெமிலா ஜெயந்தி குறைகளைக் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, திருவண்ணாமலை உதவி வேளாண் அலுவலா் வி.சிவகுருநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா். இந்த உழவா் சந்தை தொடங்கப்பட்டு வரும் டிசம்பா் 14-ஆம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது.