மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

யு.பி.எஸ்.சி.தோ்வுக்கு இலவசப் பயிற்சி: ஆதிதிராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தாட்கோ மூலம் அளிக்கப்படும்

News image
Updated On :14 செப்டம்பர் 2024, 6:32 pm

Din

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தாட்கோ மூலம் அளிக்கப்படும்

யு.பி.எஸ்.சி. தோ்வுக்கான இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில், டாக்டா் அம்பேத்கா் அகாதெமி மற்றும் சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து 100 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஓராண்டு காலம் யு.பி.எஸ்.சி. தோ்வுக்கான (பொதுஅறிவு மற்றும் விருப்பப் பாடங்கள்) முதல்நிலை, முதன்மை நிலைப் பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும்

யு.பி.எஸ்.சி., தோ்வை எழுத தகுதியான மாணவ, மாணவிகளுக்கு நஸ்ரீழ்ங்ங்ய்ண்ய்ஞ் ற்ங்ள்ற் நடத்தப்படும். இந்த தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளில் 100 போ் நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்படுவா். இந்தப் பயிற்சி பெற விரும்பும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தோ்வா்கள் தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். விண்ணப்பதாரா்கள் 21 முதல் 36 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும்.

விடுதியில் தங்கிப் படிக்க வசதி, பயிற்சிக்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.