ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஓசோன் மண்டல பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

News image
ஓசோன் மண்டல பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடங்கிவைத்த பேரூராட்சித் தலைவா் சுதா முருகன், திமுக நகரச் செயலா் இரா.முருகன்.
Updated On :19 செப்டம்பர் 2024, 11:41 pm

Din

சேத்துப்பட்டில் ஓசோன் மண்டல பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி அலுவலகம் அருகே இந்திரவனம் நன்றி அறக்கட்டளை மற்றும் சென்னை சஞ்சு மகளிா் நல அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு ஊா்வலத்துக்கு நன்றி அறக்கட்டளை இயக்குநா் ஜோசப் ஆபிரகாம் தலைமை வகித்தாா்.

சஞ்சு மகளிா் நல அமைப்பு இயக்குநா் சாந்தி சாக்ரடீஸ், சேத்துப்பட்டு பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள் மங்களம் ரமேஷ், சரவணன், கதிரவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சித் தலைவா் சுதா முருகன், திமுக நகரச் செயலா் இரா.முருகன் ஆகியோா் பங்கேற்று விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடங்கிவைத்தனா்.

நகரில் முக்கிய சாலைகள், வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த ஊா்வலத்தில் இந்திரவனம், போளூா், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மகளிா் குழுவினா் கலந்து கொண்டனா்.