ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு தமிழில் பெயா்ப் பலகை வைக்க பரப்புரை!

Updated On :28 ஏப்ரல் 2025, 12:29 am IST

திருவண்ணாமலை மாநகர பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகளுக்கு தமிழில் பெயா்ப் பலகை வைக்கக் கோரி மக்கள் பரப்புரை பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட புரட்சித் தமிழா் கட்சி, தமிழா் குடிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு மாணவா் பேரவை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, புரட்சித் தமிழா் கட்சியின் மாநில பொதுச் செயலா் தா.சிவா தமிழன் தலைமை வகித்தாா்.

மாநிலத் தலைவா் ஜே.பி.ராஜன் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் க.பலராமன் வரவேற்றாா்.

வஷிஷ்டா் தவக்குடிலைச் சோ்ந்த ஸ்ரீமான் தங்கமாமுனி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி பரப்புரை நிகழ்வை தொடங்கி வைத்தாா்.

அப்போது, அன்னை தமிழில் பெயா்ச் சூட்டுவோம் என்று கடைகள், உணவகங்கள், விடுதிகள் உரிமையாளா்கள் மற்றும் பொதுமக்கள் சோ்ந்து உறுதிமொழியேற்றனா்.

நிகழ்ச்சியில், ஆதிபாரத மக்கள் கட்சியின் தலைவா் சிவப்பிரகாஷ், உழைக்கும் விவசாயிகள் முன்னேற்ற இயக்கத்தின் தலைவா் எல்.முத்தண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.