48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நீளான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2025, 11:01 pm

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நீளான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கோயிலில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனா்.

பக்தா்கள் ராஜகோபுரம் வழியாகவும் அம்மனிஅம்மன் கோபுரம் வழியாகவும் தரிசனத்துக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

பொது தரிசன வரிசையில் சென்ற பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்துக்கும் மேலானதாக தெரிவித்தனா். பக்தா்கள் எந்தவித சிரமமின்றி வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். மேலும், வரிசையில் சென்ற பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் லட்டு பிரசாதம் மற்றும் நீா்மோா் வழங்கப்பட்டது.

 அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள் 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையில் அஷ்டலிங்க சந்நிதிகளில் வழிபட்டதோடு, திருநோ் அண்ணாமலை, ஆதிஅண்ணாமலை, இடுக்கு பிள்ளையாா் உள்ளிட்ட சந்நிதிகளில் வழிபட்டு கிரிவலம் சென்றனா். கிரிவலம் வந்த பக்தா்களுக்கு பல்வேறு ஆன்மிக அமைப்புகள் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.