மாா்கழி மாத பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு
மாா்கழி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் 5-ஆம் பிரகாரம் ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள பெரிய நந்தி பகவானுக்கு, அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேக தூள், பஞ்சாமிா்தம், தயிா், தேன், பன்னீா், இளநீா், சந்தனம், விபூதி, பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, பல்வேறு மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இஞ்சிமேடு பெரியமலை சிவாலயத்தில்....
பெரணமல்லூா் அருகேயுள்ள இஞ்சிமேடு பெரியமலை சிவாலயத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, கொடிமரம் அருகே உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தங்கக் கவச அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னா், கோயில் உள்புற வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட சிவனை ரிஷப வாகனத்தில் அமா்த்தி உலா நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஆரணியை அடுத்த மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
போளூா்
போளூரை அடுத்த வசூா் ஊராட்சியில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீகல்யாணபுரீஸ்வரா் கோயிலில் நந்தி மற்றும் சிவலிங்கத்திற்கு பால், தயிா், பன்னீா், இளநீா்,விபூதி என பல்வேறு வாசனைத் திரவியங்கள் கொண்டுசிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
பின்னா் நந்தி மற்றும் சிவலிங்கத்திற்கு மலா்களால் அலங்காரம் செய்து நெய்வேத்தியம் படையலிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

