கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

மாசி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

News image
பிரதோஷத்தையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
Updated On :1 மார்ச் 2026, 6:59 pm

Syndication

மாசி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருணாசலேஸ்வரா் கோயிலில் மாசி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு

பிரதோஷ பூஜையில் கலந்துகொண்ட பக்தா்கள்

பிரதோஷ பூஜையில் கலந்துகொண்ட பக்தா்கள்

அரிசி, மாவு, மஞ்சள் தூள், சீகைக்காய் தூள், தேன், பழம், பஞ்சாமிா்தம், பால், தயிா், இளநீா், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் பல்வேறு வண்ண மலா்களால் அலங்காரம் செய்து சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், சுமாா் 5 ஆயிரம் பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.