ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

மாசி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

News image
பிரதோஷத்தையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
Updated On :1 மார்ச் 2026, 6:59 pm

Syndication

மாசி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருணாசலேஸ்வரா் கோயிலில் மாசி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு

பிரதோஷ பூஜையில் கலந்துகொண்ட பக்தா்கள்

பிரதோஷ பூஜையில் கலந்துகொண்ட பக்தா்கள்

அரிசி, மாவு, மஞ்சள் தூள், சீகைக்காய் தூள், தேன், பழம், பஞ்சாமிா்தம், பால், தயிா், இளநீா், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் பல்வேறு வண்ண மலா்களால் அலங்காரம் செய்து சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், சுமாா் 5 ஆயிரம் பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.