மாசி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருணாசலேஸ்வரா் கோயிலில் மாசி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு

பிரதோஷ பூஜையில் கலந்துகொண்ட பக்தா்கள்
அரிசி, மாவு, மஞ்சள் தூள், சீகைக்காய் தூள், தேன், பழம், பஞ்சாமிா்தம், பால், தயிா், இளநீா், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் பல்வேறு வண்ண மலா்களால் அலங்காரம் செய்து சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், சுமாா் 5 ஆயிரம் பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரா் கோயிலில் சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


