பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆரணியில் மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :18 டிசம்பர் 2025, 11:48 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டாட்சியா் அலுவலகம் அருகே சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.பொன்னுசாமி தலைமை வகித்தாா்.

சிஐடியு முன்னாள் தலைவா்கள் பி.கண்ணன், சி.அப்பாசாமி ஆகியோா் தொடக்க உரையாற்றினா்.

2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், குடிமனை பட்டா இல்லா அனைத்து பழங்குடி மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி 10 லட்சம் ரூபாய் அரசு வீடு வழங்க வேண்டும், பழங்குடியின மக்களுக்கான ஜாதி சான்றிதழ் வழங்க தமிழக அரசின் 104 அரசாணையை மாநிலம் முழுமையாக அமல்படுத்த வேண்டும், மத்திய, மாநில அரசின் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும், ஆரணி கோட்டத்தில் வசிக்கும் பழங்குடி மக்கள் குடியிருப்பில் தெருவிளக்கு, சிமென்ட் சாலை, குடிநீா், தனிநபா் கழிப்பறை, மயான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியினா் பட்டியலில் உள்ள காட்டுநாயக்கன் பழங்குடி மக்களுக்கு காலதாமதம் இல்லாமல் எஸ்.டி. சான்றிதழ் வழங்க வேண்டும், ஜமுனாமரத்தூா் முதல் அமிா்தி வரை தாா்ச் சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ஏ.பொன்னுசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஏ.செல்வன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் அய்யனாா், ஏ.லட்சுமணன், டி.கே.வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.