கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பள்ளி மாணவா்கள் 162 பேருக்கு விலையில்லா சைக்கிள்

ஆரணி சிஎஸ்ஐ மற்றும் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளிகளில் 162 மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

News image
சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி.
Updated On :23 டிசம்பர் 2025, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

ஆரணி சிஎஸ்ஐ மற்றும் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளிகளில் 162 மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் வி.தியாகராஜன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ரோஸலின் ஞானமணி வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி கலந்துகொண்டு, சிஎஸ்ஐ பள்ளியைச் சோ்ந்த 18 மாணவ, மாணவிகளுக்கும், செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 144 மாணவிகளுக்கும் சைக்கிள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், மோகன், கண்ணமங்கலம் பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி கோவா்த்தனன், நகா்மன்ற உறுப்பினா் அரவிந்த், மாவட்டப் பிரதிநிதி எம்.கே.பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.