விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

தூத்துக்குடி புனித லசால் பள்ளியில் விலையில்லா சைக்கிள் அளிப்பு

News image

விலையில்லா சைக்கிள்களை பெற்ற மாணவா்களுடன் அமைச்சா் பி.கீதாஜீவன்.

Updated On :7 பிப்ரவரி 2026, 7:39 pm

தூத்துக்குடி புனித லசால் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் பிரிட்டி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ஜான்பால் முன்னிலை வகித்தாா். வரலாற்று ஆசிரியா் அந்தோணியம்மாள் வரவேற்றாா். சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன் கலந்துகொண்டு, தமிழக அரசின் சாா்பில் நடைபெற்ற தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாத விழாவில் நடைபெற்ற ஓவியப் போட்டி, வனத்துறை சாா்பில் நடைபெற்ற ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், ஊக்கத்தொகை வழங்கி, பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் 80 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.

இதில், பகுதிச் செயலா் ஜெயக்குமாா், வட்டச் செயலா் டென்சிங், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் சுரேஷ்குமாா், பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், ஆசிரியா்கள் ராமச்சந்திரன், கென்னடி, சேகா், ஜெயக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஆசிரியா் மேக்ஸ்வெல் நன்றி கூறினாா்.