கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மதுக்கடையை அகற்றக் கோரி போராட்டம்: 38 போ் கைது

செய்யாற்றில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்த போலீஸாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

செய்யாறு புறவழிச் சாலையில் செயல்பட்டு வரும் அரசு மதுக் கடையை அகற்றக் கோரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியைச் சோ்ந்த 38 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

செய்யாறு மாா்க்கெட் அருகே புறவழிச்சாலைப் பகுதியில் அரசு மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையால்

காமராஜா் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருவதாகத் தெரிவித்து மனித நேய மக்கள் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் மதுக் கடையை அகற்றக் கோரி பலமுறை மனு கொடுத்தாகத் தெரிகிறது. அதற்கு அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதைக் கண்டித்தும், மதுக் கடையை அகற்றக் கோரியும் புதன்கிழமை சாா் -ஆட்சியா் அலுவலகத்தில், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவா் எச்.ஜமால் தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

அங்கு டிஎஸ்பி எஸ்.கோவிந்தசாமி தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளா்கள் காண்டீபன், மங்கையரசி மற்றும் போலீஸாா்

16 பெண்கள் உள்பட 38 பேரை கைது செய்தனா்.