கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கருணாநிதி சிலை அமைப்பு: முதல்வரின் பாதுகாப்புப் பிரிவினா் ஆய்வு

News image
Updated On :26 டிசம்பர் 2025, 12:33 am

Syndication

செய்யாற்றில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவச்சிலைசிலை திறப்பு விழாவையொட்டி, மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக முதல்வரின் பாதுகாப்புப் பிரிவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு - ஆற்காடு சாலையில் அரசு கலைக் கல்லூரி அருகே புறவழிச்சாலை சந்திப்பில் முன்னாள் முதல்வா் மற்றும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் உருவச் சிலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சிலையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் டிச.27-ஆம் தேதி

திறந்து வைக்கவுள்ளாா்.

மு.கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழாவையொட்டி

மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக முதல்வரின் பாதுகாப்பு பிரிவைச் சோ்ந்த காவல் கண்காணிப்பாளா்,

துணை கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா் ஆகியோா் அடங்கிய குழுவினா் சிலை அமைந்துள்ள இடம், முதல்வா் வருகை, புறப்பாடு, பொதுமக்கள் பாா்வை, மேடை அமைத்தல், மின்விளக்குகள் அமைத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின், ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி ஆகியோா் முன்னிலையில் ஆய்வு செய்தனா்.

ஆய்வின் போது மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன், திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் எம்.கே.காா்த்திகேயன், செய்யாறு நகரச் செயலா் கே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனிவாசன், என்.சங்கா், வி.ஏ.ஞானவேல், எம்.தினகரன், ஏ.ஜி.திராவிட முருகன், சி.கே.ரவிக்குமாா். எம்.எஸ்.செல்வபாண்டியன், தோ்தல் பணிக் குழு பொறுப்பாளா்கள் வி.கோபு, புரிசை எஸ். சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.