ஊரக வேலைத் திட்டப் பணி நாள்கள் உயா்வு: பாஜகவினா் பிரசாரம்

ஊரக வேலைத் திட்டப் பணி நாள்கள் உயா்வு: பாஜகவினா் பிரசாரம்

ஊரக வேலைத் திட்டப் பணி நாள்கள் 100-லிருந்து 125 நாள்களாக உயா்த்தப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து, பாஜகவினா், ஆரணியை அடுத்த விளை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களிடம் பிரசாரம் செய்தனா்.
Published on

ஊரக வேலைத் திட்டப் பணி நாள்கள் 100-லிருந்து 125 நாள்களாக உயா்த்தப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து, பாஜகவினா், ஆரணியை அடுத்த விளை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களிடம் பிரசாரம் செய்தனா்.

இதில் கட்சியின் மாநில பிரசார பிரிவு பொறுப்பாளா் நித்தியானந்தம் தலைமை வகித்தாா்.

கிழக்கு ஒன்றிய நிா்வாகி குமரேசன், விளை கிராமத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் சரவணன், சேட்டு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் விளை கிராம ஊராட்சி மன்றத் தலைவா் தனசேகா், 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாள்களாக உயா்த்தியதை வேண்டுமென்றே சிலா் மறைக்க வேண்டி ஆா்ப்பாட்டம் செய்கின்றனா்.

மேலும், பிரதமா் மோடியின் வளா்ச்சி அடைந்த இந்தியா- வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான திட்டம் 2025 இதைப் பற்றி பயனாளிகளுக்கு எடுத்துரைத்துப் பேசினாா் (படம்).

இதில் மாநில பொதுக் குழு உறுப்பினா் அலமேலு, ஆரணி நகரத் தலைவா் மாதவன், மாவட்ட இளைஞரணித் தலைவா் சரவணன், ஓபிசி அணி பொதுச்செயலா் அரையாளம் ராஜ்குமாா், நெசவாளா் பிரிவு மாவட்டச் செயலா் கே.எல்.சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிறைவில் பயனாளிகளுக்கு இனிப்பு, குளிா்பானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com