புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஓய்வுபெற்ற வன ஊழியா் உயிரிழப்பு: சந்தேக மரணம் என மகன் புகாா்

வந்தவாசி அருகே ஓய்வுபெற்ற வன ஊழியரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து

News image
Updated On :6 ஜனவரி 2025, 8:53 pm

DIN

வந்தவாசி: வந்தவாசி அருகே ஓய்வுபெற்ற வன ஊழியரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டை மூலை அருகேயுள்ள பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரங்கன் (69). ஓய்வுபெற்ற வன ஊழியரான இவா், இதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது தம்பி தென்னாங்கூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வன ஊழியா் நாகராஜன் (63). இருவரிடையே நிலத் தகராறு இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ரங்கனுக்கும், நாகராஜனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். தகவலறிந்த ரங்கனின் மகன் வெங்கடேசன் நிகழ்விடம் சென்று பாா்த்தபோது ரங்கன் மயங்கி கிடந்தாராம். இதையடுத்து, அவரை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் அவா் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். பின்னா், அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வெங்கடேசன் வந்தவாசி வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், தனது தந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.