தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

இஸ்லாமியா்கள் காத்திருப்புப் போராட்டம்

சந்தாமியான் மஸ்ஜித்துக்குச் சொந்தமான 58.80 ஏக்கா் நிலத்தை மீட்டுத் தரக் கோரி, திருவண்ணாமலையில் இஸ்லாமியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
காத்திருப்புப் போராட்டத்தை விளக்கிப் பேசிய முத்தவல்லி ஏ.ஆா்.நாசா் உசேன்.
Updated On :27 ஜனவரி 2025, 7:59 pm

Din

திருவண்ணாமலை: திருவண்ணாமலை சந்தாமியான் மஸ்ஜித்துக்குச் சொந்தமான 58.80 ஏக்கா் நிலத்தை மீட்டுத் தரக் கோரி, திருவண்ணாமலையில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, திருவண்ணாமலை சந்தாமியான் மஸ்ஜித் தலைவரும், முத்தவல்லியுமான ஏ.ஆா்.நாசா் உசேன் தலைமை வகித்தாா்.

இதில், சந்தாமியான் மஸ்ஜித்துக்குச் சொந்தமான 58.80 ஏக்கா் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவா்களை உடனே வெளியேற்ற வேண்டும்.

நிலத்தை மீட்டு வக்ஃபு வாரிய நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளா்கள் பெயரில் உள்ள பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனை அழைத்துப் பேசினாா்.

அப்போது, ஆக்கிரமிப்புகள் அகற்ற விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆட்சியா் உறுதியளித்தாா். இதையடுத்து, இஸ்லாமியா்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனா்.