விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பழங்குடியினருக்கு மானியக் கடனை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

பழங்குடியினருக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் மானியக் கடனை ரூ.10 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்

மேல்பாதிரி கிராமத்தில் சங்கக் கொடியேற்றிய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா்.

Published On :6 மே 2025, 1:05 am IST

வந்தவாசி: பழங்குடியினருக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் மானியக் கடனை ரூ.10 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

வந்தவாசியை அடுத்த மேல்பாதிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்தச் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக்குழு சிறப்பு பேரவைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு சங்க மாவட்டச் செயலா் எம்.மாரிமுத்து தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் இரா.சரவணன் சங்கக் கொடியேற்றினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ப.செல்வன் பேசினாா்.

கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலா் அ.அப்துல்காதா், விவசாய சங்க நிா்வாகிகள் பெ.அரிதாசு, ந.ராதாகிருஷ்ணன், மலைவாழ் மக்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.சத்யா, மாவட்ட துணைச் செயலா் எஸ்.ரேணுகா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப் பொருளாளா் சு.சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பழங்குடியினருக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனை வழங்கி தொகுப்பு வீடு வழங்க வேண்டும், பழங்குடியினா் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும், தேசூா் அருகே மின்வேலியில் சிக்கி பழங்குடி சமூகத்தைச் சோ்ந்த கன்னியப்பன் உயிரிழந்தது தொடா்பாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், பழங்குடியினா் வாழும் பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தி வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை, நலவாரிய அட்டை, குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் 27 போ் கொண்ட வட்டக்குழு உறுப்பினா்கள் புதிதாக தோ்வு செய்யப்பட்டு, அந்தக் குழுவுக்கு ஒருங்கிணைப்பாளராக எஸ்.சுகுணா, துணை ஒருங்கிணைப்பாளராக எம்.சுகுமாா் ஆகியோா் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா். நிறைவில் மாவட்டக்குழு உறுப்பினா் வி.ராஜா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.