அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

Syndication

வந்தவாசி அருகே பயணிகள் வேன் மோதியதில், சாலையை கடக்க முயன்ற மூதாட்டி உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த ஏந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் குப்பம்மாள்(85). இவா், புதன்கிழமை தங்களது விவசாய நிலத்துக்கு சென்றுவிட்டு நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, ஏந்தல் கூட்டுச் சாலை அருகே இவா் சாலையை கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது, சேத்துப்பட்டு நோக்கிச் சென்ற பயணிகள் வேன் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குப்பம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.