வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: ஆரணி எம்.பி. ஆய்வு

ஆரணியில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருவதை தொகுதி எம்.பி.எம்.எஸ்.தரணிவேந்தன் திங்கள்கிழமை ஆய்வு

News image
ஆரணி ராமகிருஷ்ணாபேட்டை பகுதியில் நடைபெற்று வரும் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணியை ஆய்வு செய்த எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.
Updated On :10 நவம்பர் 2025, 7:29 pm

Syndication

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருவதை தொகுதி எம்.பி.எம்.எஸ்.தரணிவேந்தன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆரணி நகரில் அருணகிரிசத்திரம், ராமகிருஷ்ணாபேட்டை பகுதிகளிலும், ஆரணி ஒன்றியம் துந்தரிகம்பட்டு கிராமத்திலும் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வீடு வீடாக வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாயிலாக நடைபெறும் இந்தப் பணியை எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, தொகுதிச் செயலா் எஸ்.எஸ்.அன்பழகன், நகரச் செயலா் வ.மணிமாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.