எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்து தொடா்பாக போலீஸாா் விசாரணை

News image
Updated On :10 நவம்பர் 2025, 6:31 pm

Syndication

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்து தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த வெங்கிடாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வேணுகோபால் (70). இவரது மனைவி ராஜேஸ்வரி உடல்நல பிரச்னை காரணமாக சென்னையில் மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறாா். இவரை பாா்ப்பதற்காக வேணுகோபால் வீட்டை பூட்டி விட்டு சனிக்கிழமை சென்னை சென்றுள்ளாா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினா் வேணுகோபாலுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து இவா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது பீரோவிலிருந்த 3 பவுன் தங்க நகைகள், 770 கிராம் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வேணுகோபால் அளித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.