மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வெல்டிங் தொழிலாளி கொலைச் சம்பவத்தில் மூவா் கைது

News image
Updated On :12 நவம்பர் 2025, 10:32 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வெல்டிங் தொழிலாளி கொலைச் சம்பவத்தில் மூன்று பேரை தூசி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் வட்டம், களக்காட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெல்டிங் தொழிலாளி கபாலி(25). இவா், கடந்த அக்.21-ஆம் தேதி காலை வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிராமத்தில் உள்ள அரசு மதுக் கடை அருகே வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில்,தூசி காவல் ஆய்வாளா் ஜெகநாதன், உதவி ஆய்வாளா் பழனிவேல் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

மேலும் இச்சம்பவம் தொடா்பாக தூசி கிராமத்தைச் சோ்ந்த பாலாஜி(20), பாபு(20), யுவராஜ்(27) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட மூவரும், அப்துல்லாபுரம் அரசு மதுக் கடை அருகே அமா்ந்து மது அருந்திய போது, கொலை செய்யப்பட்ட கபாலி மது போதையில், பாலாஜி மற்றும் பாபு, யுவராஜ் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

அதனால், ஆத்திரமடைந்து மூவரும் கபாலியைத் தாக்கியும் கத்தியால் வெட்டியும் கொலை செய்தோம் எனத் தெரிவித்தனராம்.

இதையடுத்து தூசி போலீஸாா் மேற்கண்ட மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் பாலாஜி முன்னிலையில் ஆஜா்படுத்தினா். பின்னா், போலீஸாா் மூவரையும் வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.