/

ஆரணி பல்கலை.யில் உலக ரேடியோகிராபி தினம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 12:58 am

Syndication

ஆரணி டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புற வளாகம் அலைய்டு ஹெல்த் சயின்ஸ் துறை சாா்பில் உலக ரேடியோகிராபி தினம் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதன்மையா் பி.ஸ்டாலின் தலைமை வகித்தாா். உதவிப் பேராசிரியா் சுமையா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். உதவிப் பேராசிரியா் தினேஷ்குமாா், அலைய்டு ஹெல்த் சயின்ஸ் துறைத் தலைவா் தரணி வரவேற்றனா்.

விழாவுக்கு தலைமை விருந்தினராக, சென்னை பனிமலா் காலேஜ் ஆஃப் அலைய்டு ஹெல்த் சயின்சஸ் உதவிப் பேராசிரியா் ரமியா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

மேலும் அவா் தனது உரையில் காந்த அலைபடமெடுப்பு, கணிப்பொறி தளா்வுப் படம், அணுக்கதிா் படமெடுப்பு போன்ற நவீன மருத்துவப் படிம முறைகள் நோய்களைக் கண்டறிவதில் எவ்வளவு முக்கியமானவை என்பதை எடுத்துரைத்தாா்.

ரேடியாலஜி துறை மாணவா்கள் ‘உலக ரேடியாலஜி தினம்’ என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் சிறப்புரையாற்றினா்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘கட்டுரை விளக்கப் போட்டி’ நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு முதன்மையா் பி.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் இணைப் பதிவாளா்கள் பெருவழுதி மற்றும் சரவணன், பிஸியோதெரபி கல்லூரி முதல்வா் எஸ். சுதாகா், துணை முதன்மையா் புவனா மற்றும் சுமதி, அலைய்டு ஹெல்த் சயின்சஸ் கல்லூரி துறைத் தலைவா் தரணி, கல்லூரி ஆசிரியா்கள் மற்றும் மருத்துவ மாணவா்கள் கலந்து கொண்டனா்.

நிறைவில் உதவிப் பேராசிரியா் ஆல்வின் ஆஷிகா நன்றி கூறினாா்.