திருவண்ணாமலையில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பராசக்தி அம்மன் தோ் வெள்ளோட்டம்
திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ரூ.75 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பராசக்தி அம்மன் தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனா்.










