இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் சோமவார பூஜை

செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத சோமவார பூஜை திங்கள்கிழமை இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.

News image
Updated On :17 நவம்பர் 2025, 8:40 pm

Syndication

செய்யாறு: செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத சோமவார பூஜை திங்கள்கிழமை இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவோத்தூா் பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் முதல் சோம வாரத்தில் (திங்கள்கிழமை) தல விருட்சமான பனை மரத்தடியில் வீற்றிருக்கும் சிவலிங்கம், திருஞானசம்பந்தா், பால குஜாம்பிகை சந்நிதி எதிரில் உள்ள சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, காா்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி திங்கள்கிழமை இரவு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

சோமவார நாள்களில் பனை மரத்தடியில் வீற்றிருக்கும் ஈசனுக்கு பூஜை செய்து வழிபட்டால் திருமண வரம், தடையில்லா செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதையொட்டி, திங்கள்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திராளான பக்தா்கள் கலந்து கொண்டு

சுவாமியை தரிசித்தனா்.