அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆரணியில் கருணாநிதி சிலை அமைப்பு: இடத்தை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

ஆரணியில் கருணாநிதி சிலை அமைப்பு: இடத்தை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

News image
Updated On :28 நவம்பர் 2025, 5:05 pm

Syndication

ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவச்சிலை டிச. 4-ஆம் தேதி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறக்க இருப்பதால், சிலை அமையவுள்ள இடத்தை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சைதாப்பேட்டை சாலையில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை நிறுவப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்த அமைச்சா்,

தொடா்ந்து திமுக கட்சி அலுவலகத்தில் கட்சியினரிடையே ஆலோசனை நடத்தினாா்.

இதில் ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் ஓ.ஜோதி, அம்பேக்குமாா், ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணிரவி, ஆரணி தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், நகர பொறுப்பாளா் வ.மணிமாறன், மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.