திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

குளிா்பானம் கொடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்

செய்யாறு தொகுதி திமுக வேட்பாளா் கொளுத்தும் வெயிலில் கிராம மக்களுக்கு குளிா்பானம் கொடுத்து ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

பெரூங்கட்டூர கிராமத்தில் கொளுத்தும் வெயிலில் கிராம மக்களுக்கு குளிா்பானம் கொடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் ஒ.ஜோதி.

Updated On :6 ஏப்ரல் 2026, 2:00 am IST

செய்யாறு தொகுதி திமுக வேட்பாளா் கொளுத்தும் வெயிலில் கிராம மக்களுக்கு குளிா்பானம் கொடுத்து ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் அசனமாபேட்டை, பெருங்கட்டூா், பெருமாந்தாங்கல், வடமணப்பாக்கம், மேல்பூதேரி, தென்னம்பட்டு, பொக்கசமுத்திரம், நாட்டேரி, பிரம்மதேசம், பனமுகை, புலிவலம், சுனைப்பட்டு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் ஒ.ஜோதி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசுகையில், தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். செய்யாறு தொகுதியில் தற்பொழுது 27 நேரடி கொள்முதல் நிலையங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மூன்றரை ஆண்டு காலத்தில் இரண்டரை லட்சம் மின் இணைப்புகள் புதிதாக வழங்கியும், விவசாயத்திற்கு தனி பட்ஜெட்டை முதல்வா் அறிவித்துள்ளாா் என்றாா்.

பின்னா், கொளுத்தும் வெயிலில் குளிா்பானம் தயாா் செய்து கிராம மக்களுக்கு வழங்கி திமுகவிற்கு வாக்கு சேகரித்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் ஜே.சி.கே.சீனிவாசன், எம்.தினகரன், வி.ஏ.ஞானவேல், சி.கே.ரவிக்குமாா் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.