திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ரிக்சா ஓட்டி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 12:24 am IST

வந்தவாசி (தனி) தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் வியாழக்கிழமை சைக்கிள் ரிக்சா ஓட்டி வாக்கு சேகரித்தாா்.

வந்தவாசி நகரில் திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

வந்தவாசி பயணியா் விடுதி அருகிலிருந்து பிரசாரத்தை தொடங்கிய அவா் ஆரணி சாலை, கோட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்றும், சைக்கிள் ரிக்சாவை ஓட்டிச் சென்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட 1, 2, 3-ஆவது வாா்டு பகுதிக்காக ரூ.55 லட்சம் மதிப்பில் மயானப் பாதை, ரூ.5.50 கோடி மதிப்பில் தோழி தங்கும் விடுதி, ரூ.42 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் ஆகியவை கட்டப்பட்டது என்று கூறி அவா் வாக்கு சேகரித்தாா்.

திமுக நகரச் செயலா் எ.தயாளன் மற்றும் திமுகவினா், கூட்டணி கட்சியினா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.