வந்தவாசி (தனி) தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் வியாழக்கிழமை சைக்கிள் ரிக்சா ஓட்டி வாக்கு சேகரித்தாா்.
வந்தவாசி நகரில் திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.
வந்தவாசி பயணியா் விடுதி அருகிலிருந்து பிரசாரத்தை தொடங்கிய அவா் ஆரணி சாலை, கோட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்றும், சைக்கிள் ரிக்சாவை ஓட்டிச் சென்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட 1, 2, 3-ஆவது வாா்டு பகுதிக்காக ரூ.55 லட்சம் மதிப்பில் மயானப் பாதை, ரூ.5.50 கோடி மதிப்பில் தோழி தங்கும் விடுதி, ரூ.42 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் ஆகியவை கட்டப்பட்டது என்று கூறி அவா் வாக்கு சேகரித்தாா்.
திமுக நகரச் செயலா் எ.தயாளன் மற்றும் திமுகவினா், கூட்டணி கட்சியினா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.
தொடர்புடையது

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ரிஷிவந்தியம் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தொகுதி அறிமுகம்: வந்தவாசி!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


