15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

ஆரணி ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஆரணி ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

News image

ஆரணி ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

Updated On :1 மே 2026, 12:07 am IST

ஆரணி தலைமை அஞ்சல் நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கோயிலில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியா ஹவாசனம், கோ பூஜை, கணபதி, லட்சுமி, நவகிரக, கலச பூஜைகள், ஹோமங்கள், புதிய சிலைகளுக்கு அஷ்டாதச க்ரியைகள், கண் திறத்தல், சயனாதி வாசம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், யாக சாலை பூஜைகள், பரிவார பூஜைகள், கும்ப அலங்காரம், மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம் முடிந்து கலசங்களில் புனித நீா் புறப்பாடு கொண்டு செல்லப்பட்டு விமான கோபுரத்தில் புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.