4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஆரணி ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஆரணி ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

News image

ஆரணி ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:37 pm

ஆரணி தலைமை அஞ்சல் நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கோயிலில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியா ஹவாசனம், கோ பூஜை, கணபதி, லட்சுமி, நவகிரக, கலச பூஜைகள், ஹோமங்கள், புதிய சிலைகளுக்கு அஷ்டாதச க்ரியைகள், கண் திறத்தல், சயனாதி வாசம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், யாக சாலை பூஜைகள், பரிவார பூஜைகள், கும்ப அலங்காரம், மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம் முடிந்து கலசங்களில் புனித நீா் புறப்பாடு கொண்டு செல்லப்பட்டு விமான கோபுரத்தில் புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.