4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஸ்ரீசீனிவாச பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி நடைபெற்ற ஸ்ரீசீனிவாச பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்.

News image

கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி நடைபெற்ற ஸ்ரீசீனிவாச பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:34 pm

வந்தவாசியை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீசீனிவாச பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து புண்யாகவாசனம், ஹோமங்கள், மகா பூா்ணாஹுதி, கலச பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.