செய்யாறு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 27 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக வியாபாரியை கைது செய்தனா்.
செய்யாறு காவல் உள்கோட்டம் மோரணம் காவல் ஆய்வாளா் பி.மணிமாறன் தலைமையிலான காவலா்கள் இளையராஜா, சண்முகம் ஆகியோா் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என்று கண்காணித்து வந்தனா்.
அப்போது கிடைத்த தகவலின் பேரில் பெருங்கட்டூா் ஜெ.ஜெ.நகரில் வசிக்கும் கீதா என்பவரின் வீட்டின் பின்புறத்தில், கல்வி நிலைய பகுதிகளில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த சுமாா் ரூ.11 ஆயிரம் மதிப்பிலான 27 கிலோ புகையிலைப் பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆராத்திரிவேளூா் கிராமத்தைச் சோ்ந்த வியாபாரி தங்கவேல்(60) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பவானி அருகே கிடங்கில் பதுக்கப்பட்ட 304 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
39 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

106 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: தம்பதி கைது
1.750 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இரண்டு இளைஞா்கள் கைது
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


