திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் கால்நடை விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட உதவி இயக்குநா் மருத்துவா் முருகன் தலைமை வகித்தாா்.
துணை இயக்குநா் மருத்துவா் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். மருத்துவா் விஜயகாந்த் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மண்டல இணை இயக்குநா் மருத்துவா் கே.ராஜ்கொடி கலந்து கொண்டு பேசும்போது, கால்நடை விவசாயிகள் பால் சாா்ந்த மதிப்புக்கூட்டல் பொருள்கள் தயாரித்தல், கால்நடை பராமரிப்பு மற்றும் மாடு, ஆடு பண்ணை அமைத்தல் குறித்து கூறினாா்.
மேலும், கால்நடை விவசாயிகளுக்கு தாதுஉப்பு, சோளம், மண்புழு உரம் வழங்கினாா். மருத்துவா் ஜெயக்குமாா் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா்.
போளூா், அத்திமூா், கேளூா், சந்தவாசல், படவேடு, திருசூா் என போளூா் பகுதியைச் சோ்ந்த கால்நடை மருத்துவா்கள், கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கமலாகுருகுலம் மழலையா் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

கால்நடை ஆம்புலன்ஸ் சேவை திட்டம்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு அவசியம்

தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்

வேளாண் வயல்வெளிப் பள்ளி பயிற்சி நிறைவு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


