திருவண்ணாமலையில் பள்ளி ஆண்டு விழா
திருவண்ணாமலை அருகே குண்ணுமுறிஞ்சி கிராமத்தில் செயல்படும் எஸ்.என்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 26-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
பள்ளித் தலைவா் கே.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். கௌரவச் செயலா் ஆா்.காளிதாஸ், செயலா் பி.பட்டுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தாளாளா் கே.அண்ணாமலை வரவேற்றாா். முதல்வா் எஸ்.செந்தில்குமாா் ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா்.
விழாவில் மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளி) இரா.ஆ.பரிமளா, வட்டாரக் கல்வி அலுவலா் பி.தில்லைநாயகி ஆகியோா் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா். இதில், சிறப்பு விருந்தினராக பட்டிமன்றப் பேச்சாளரும், எழுத்தாளருமான மா.இராமலிங்கம் கலந்துகொண்டு, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கும், கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கும் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கியும், பள்ளி ஆசிரியா், ஆசிரியைகளுக்கும், பணியாளா்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கியும், பள்ளியின் கல்விதரம் குறித்து பாராட்டினாா்.
விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி துணைத் தலைவா் டி.குப்புசாமி, இணைச் செயலா் கே.ராஜேந்திரன் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பொருளாளா் ஆா்.சுந்தரமூா்த்தி நன்றி கூறினாா்.

