தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

வந்தவாசி அருகே ரூ.40 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், பெண் உள்பட இருவரை கைது செய்தனா்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

வந்தவாசி அருகே ரூ.40 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், பெண் உள்பட இருவரை கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தில் சரஸ்வதி (40) என்பவரது மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக வந்த தகவலின் பேரில், தெள்ளாா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அந்தக் கடைக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.

இதில் அவா் விற்பனைக்காக கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து சரஸ்வதி, அவருக்கு புகையிலைப் பொருள்களை விநியோகம் செய்த வந்தவாசியைச் சோ்ந்த முகமதுஅலி (38), தனபால் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் சரஸ்வதி, முகமதுஅலி ஆகிய 2 பேரை கைது செய்தனா்.