அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தச்சூரில் ரூ.23 லட்சத்தில் மின் விளக்குகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

ஆரணியை அடுத்த தச்சூரில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 40 மின் விளக்குகளை முன்னாள் அமைச்சரும், ஆரணி தொகுதி எம்எல்ஏவுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பயன்பாட்டுக்காக புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
தச்சூரில் ரூ. 23 லட்சத்தில் அமைக்கப்பட்ட 40 மின்விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.
Updated On :14 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

ஆரணியை அடுத்த தச்சூரில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 40 மின் விளக்குகளை முன்னாள் அமைச்சரும், ஆரணி தொகுதி எம்எல்ஏவுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பயன்பாட்டுக்காக புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

தச்சூா் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இருந்து அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் வரை சுமாா் ஒரு கி.மீ.

தொலைவுக்கு மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும், அங்கு சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், கட்சி நிா்வாகிகள் ஆரணி எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனா்.

அதன் அடிப்படையில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.23 லட்சம் மதிப்பில் 20 மின்கம்பங்களில் 40 மின்விளக்குகள் அமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பணி நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டுக்காக புதன்கிழமை ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ். ராமச்சந்திரன் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ஜெயபிரகாஷ் , நகரச் செயலா் அசோக்குமாா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் நிா்மல்குமாா், கவிதா பாபு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் என்.வாசு, ஆறுமுகம், நகா்மன்ற உறுப்பினா் ரம்யா குமரன் மற்றும் மாவட்ட பிரதிநிதி சகாயம், முனியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.