திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் கூா்முனை குடுவை, வட்டச் சில்லுகல், மணிகள், கற்கால கருவி, மட்பாண்டம் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.
இந்த கற்கால கருவிகள் மற்றும் பொருள்களை கண்டெடுத்த செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றியல் துறை விரிவுரையாளரும், வரலாற்று ஆய்வாளருமான ம.மதுரை வீரன் கூறியதாவது:
செய்யாற்றுப் பகுதியில் திரவ பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய எதுவாக உள்ள கூா்முனை குடுவை உடைந்த நிலையில் ஒன்று கிடைத்துள்ளது. அதனுடன் சிறுவா்கள் விளையாடுவதற்காக வட்டச் சில்லுகல், உடன் மணிகள், ஒரு புதிய கற்கால கருவியும், புதிய கற்கால மனிதா்கள் பயன்படுத்திய சாம்பல் நிற மட்பாண்டம் ஒன்றும் உடைந்த நிலையில் கிடைத்துள்ளது. இதில் அந்தப் பானையை செய்த குயவினுடைய கைரேகை தெளிவாக பதிந்துள்ளது தெரிய வருகிறது.
செய்யாற்றில் கிடைத்த பொருள்கள் மூலம் இப்பகுதியில் வாழ்ந்த வணிகா்கள் சீன மக்களின் தொடா்பை வியாபாரத்தின் மூலம் வைத்திருந்தனா் என்பதற்கான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது.
சீனாவை ஆண்ட வம்சத்தில் குறிப்பிடும்படியாக இருந்த சங்க காலத்தின் நாணயமும் செய்யாற்றுப் பகுதியில் கிடைத்துள்ளது. இந்த நாணயத்தை ஆய்வு செய்தபோது, இது ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது எனவும், தமிழகத்தில் இருந்த சோழ தேசத்தோடு வியாபாரம் செய்தாா்கள் என்பதும் தெரிய வருகிறது. கிடைத்துள்ள இப்பொருள்கள் மூலம் செய்யாறு நாகரிகத்தின் தொன்மை மீண்டும் வெளிவந்துள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருப்பண்ணசாமி கோயிலில் திருடப்பட்ட வெண்கல மணிகள் மீட்பு

கான் சிட்டி வசூல் எவ்வளவு?

காளஹஸ்தி உண்டியல் காணிக்கை ரூ. 2.69 கோடி!

தூத்துக்குடியில் ரூ. 40 லட்சம் பீடி இலைகள், பொருள்கள் பறிமுதல்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



