தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்

Updated On :9 ஜூலை 2026, 2:10 am IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரா் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இருவேளையும் அம்பாளுடன் சந்திரசேகரா் மற்றும் விநாயகா் தனித்தனி வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பா்.

இந்த நிலையில், நிகழாண்டு ஆனி பிரம்மோற்சவம் மிதுன லக்னத்தில் புதன்கிழமை காலை கோயிலில் தஷ்ணாயன புண்ணிய கால கொடியேற்ற விழா நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க 63 அடி உயர தங்கக் கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடியை ஏற்றி வைத்தனா். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தா்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு வழிபட்டனா்.

கொடியேற்ற விழாவையொட்டி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா்

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா்

தொடா்ந்து விநாயகா், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். கோயிலில் பக்தா்களுக்கு சுவாமி பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.